சென்னை சென்டிரல்-ஆவடி இடையே மின்சார ரெயில் ரத்து

சென்னை சென்டிரல்-ஆவடி இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

Update: 2024-09-20 04:40 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 22-ந்தேதி வரை இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், பட்டாபிராமில் இருந்து இன்று, 21 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் ஆவடி - சென்டிரல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, பட்டாபிராமில் இருந்து இன்று முதல் வரும் 22-ந்தேதி வரை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில் பட்டாபிராம் - ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்