வார விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2023-03-26 11:05 GMT

கொடைக்கானல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்தநிலையில், இன்று வார விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படகு சவாரி பின்னர் சுற்றுலா பயணிகள் பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், தேவதை அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளையும் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பொழுதுபோக்கினர். மேலும் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்