தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் இளைஞர்களுக்கு நெசவு பயிற்சி

தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-21 19:15 GMT

தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொழில்முனைவோர்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவுது:- கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவளார் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலை வாய்ப்பு வழங்குதல் அல்லது தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது, கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல், வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளித்தல் இதன் நோக்கமாகும்.

ஊக்கத்தொகை

2023-2024-ல் முதற் கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல், கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல், இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கு விணப்பிப்பதற்கு 18 முதல் 35 வயது வரை உள்ளவராகவும், கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாகவும், எழுத, படிக்க தெரிந்திருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில்

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது இது தொடர்பான கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகம், வசந்தபுரம் மதுரை-மண்டபம் மெயின்ரோடு, பரமக்குடியில் அலுவலக வேலை நாட்களிலும் உரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்