நகைக்கடை ஊழியரிடம் 6 பவுன் நகை வழிப்பறி

நகைக்கடை ஊழியரிடம் 6 பவுன் நகையை பறித்து தப்பி சென்றனர்.

Update: 2022-08-07 19:17 GMT

மதுரை புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 45) நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பாண்டியராஜன் வெளியூரில் இருந்து 6 பவுன் நகைகளை வாங்கி கொண்டு புட்டுத்தோப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்