விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி அதிமுகவில் இருந்து நீக்கம்

விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-07-06 08:05 GMT

சென்னை,

விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எஸ். முரளி (எ) ரகுராமன், (விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்