சத்தியமங்கலம் அருகே புளியமரத்தில் வேன் மோதி விபத்து - 9 பேர் படுகாயம்...!

சத்தியமங்கலம் அருகே சாலையோர புளியமரத்தில் வேன் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-06-04 14:34 GMT


கோவையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 69). இவருடைய மகன் கார்த்திகேயன் என்பவருக்கு வரும்10-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கான துணிமணிகள் எடுப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த வேன் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னரின் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோ புளியமரத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஜெயலட்சுமி, ரவிக்குமார், சாந்தி, சுரேஷ், ரம்யா பிரியா, மேகலா, காஞ்சனா, சண்முகம், வேன் டிரைவர் ராஜ்மோகன் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்ளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்