தூய்மை பணிக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி
தூய்மை பணிக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.8.48 லட்சத்தில் வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி ஊராட்சிகளில் தூய்மை பணிகளுக்கு 2 டிராக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் கலந்துகொண்டு 2 ஊராட்சிகளின் டிராக்டர் சாவிகளை ஊராட்சி தலைவரிடம் வழங்கினார். இதில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், கற்பகம் நீலமேகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.