குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-22 09:35 GMT

தூத்துக்குடி மாவாட்டம்,கயத்தாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர்.இவரது மகன் சுடலைமணி (வயது21). இவரது தந்தை,தாய் இருவரும் இறந்து விட்டனர்.பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் சுடலைமணி கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில்,இன்று காலை 10 மணி அளவில் தனது உறவினர்கள் முனியசாமி,சுடலை மணி ஆகியோருடன் சேர்ந்து பன்னீர் குளம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.நீச்சல் தெரியாத அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார்.இதனை கண்ட நண்பர்கள் இருவரும் அருகில் இருந்தவர்களிடம் கூறினார்கள்.

அங்கு வந்த மகாராஜன், முத்துராமன் ஆகியோர் குளத்தில் இறங்கி சுடலமணியை தூக்கினார்கள், ஆனால் சுடலை மணி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுடலைமணியின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்