கர்நாடகாவிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது

கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது.

Update: 2023-07-28 09:15 GMT

பிலிகுண்டுலு,

கர்நாடகாவில் பெய்த கனமழையின்  காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 11,870 கன அடியாக சரிந்துள்ளது.

கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தற்போது 6,300 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்