பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.5½ லட்சத்துக்கு ஏலம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.5½ லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
கரூர் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 39 இருசக்கர வாகனங்கள் என 41 வாகனங்கள் நேற்று கரூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன், மதுவிலக்கு ஆய்வாளர் ரஷ்யாசுரேஷ், கோட்ட கலால் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலையில் 41 வாகனங்கள் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டன.