மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-05-01 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தேவர் உளிமங்கலம் அருகே உள்ள பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் சோமண்ணா. இவருடைய மனைவி ஜெயம்மா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமடையாததால் மனமுடைந்த ஜெயம்மா கடந்த 29-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்