தர்மபுரியில்கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-04-21 19:00 GMT

தர்மபுரி செட்டிகரை பகுதியைச் சேர்ந்தவர் கனக பசுபதி (வயது 28). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கனக பசுபதிக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கணவருடன் கோபித்து ெகாண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கனக பசுபதி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் விஷம் குடித்து செட்டிகரை பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரம் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கனக பசுபதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்