பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2023-09-01 18:53 GMT

அரியலூர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இப்போட்டியில் 30 பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக ஒலிம்பிக் கொடியை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனினும், குறுவட்ட கொடியை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சந்திரசேகரனும் ஏற்றினர். போட்டிகளின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்திருனர்.

Tags:    

மேலும் செய்திகள்