'விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும் அளிக்கக் கூடாது' - கோர்ட்டு நிபந்தனை

காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .

Update: 2023-06-16 16:38 GMT

சென்னை,

அமலாக்கப்பிரிவு சார்பில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் காவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜிக்கு வரும் 23-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள நிலையில், அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்படும் என நீதிபதியிடம் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனை சிகிச்சையை தொடரலாம் என்றும், மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், "விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு எந்தவித அச்சுறுத்தலும், வற்புறுத்தலும் அளிக்கக் கூடாது. காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது. விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு மூன்றாம் நிலை முறையை பயன்படுத்தக் கூடாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறுமின்றி விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் உடல் தகுதி குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பிறகு விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு தேவையான பாதுகாப்பை அமலாக்கத்துறை வழங்க வேண்டும்" என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 


Full View



Tags:    

மேலும் செய்திகள்