கூரியர் டெலிவரி செய்யும் வாலிபரின் பையை திருடிச் செல்லும் கொள்ளையர்கள்...!

சென்னை அருகே கூரியர் டெலிவரி செய்யும் வாலிபரின் பையை தூக்கி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-05-21 14:19 GMT


சென்னை முகலிவாக்கம், பட்டம்மாள் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த கூரியரை டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த வீட்டிற்கு வந்த பொருளை மட்டும் எடுத்து கொண்டு மீதம் உள்ள கூரியர் அடங்கிய பையை மோட்டார் சைக்கிளின் மீது வைத்து விட்டு உள்ளே சென்று டெலிவரி செய்து விட்டு வந்தபோது கூரியர் பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கூரியர் பையை வைத்து விட்டு செல்லும் மோட்டார் சைக்கிளை நோட்டமிட்டு பின்னர் அந்த நபர் உள்ளே சென்றவுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றபடியே அந்த பையை அசால்டாக தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அந்த கூரியர் பையில் கிரடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பாஸ்போர்ட்டுகள், செல்போன்கள் என விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததின் பேரில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த இரண்டு நபர்கள் முகலிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் முன் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டிகளின் மீதுள்ள இரும்பு மூடிகளை திருடி செல்லும் நபர்கள் என்பதும் தொடர்ந்து போலீசாருக்கு சவால் விட்டு குறிப்பிட்ட இந்த பகுதிகளிலேயே திருடி வருவதும் தெரியவந்துள்ளது.

போலீசாருக்கு சவால் விடும் வகையில் முகலிவாக்கத்தை மட்டும் குறி வைத்து திருடும் இரண்டு திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்