கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் போராட்டம் - சீமான்

கொசஸ்தலை ஆற்றின் நடுவே மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் 31-ம் தேதி போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-07-19 12:00 GMT

கொசஸ்தலை ஆற்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படகில் சென்று ஆய்வு செய்தார்

திருவொற்றியூர்,

சென்னை, எண்ணூர் வடசென்னை அனல் மின் நிலையம் அருகே காட்டுக்குப்பம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வகையில் அமைக்கப்படும் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் சுற்று புறசூழல் ஆய்விற்காக நாம் தமிழர் கடசியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொசஸ்தலை ஆற்றில் பைபர் படகில் மீனவர்களுடன்சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,

ஆற்றை மறைத்து நடுவில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை செயல் படுத்தினால் ஆற்று நீர் எப்படி கடலில் கலக்கும், இதனால் ஆற்றில் இருக்க கூடிய மீன்கள் செத்து மிதக்க கூடிய நிலையை கண்கூடாக பார்த்தேன். காற்றிலும், நிலத்திலும் உலர் சாம்பல் பரவி உள்ளது இதனால் சுவாச கோளாறு ஏற்படுகிறது.

சூரிய ஒளி மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்து விட்டு ஆபத்து தரக் கூடிய நச்சு ஆலைகளை அரசு ஏற்று நடத்துகிறது. இந்த ஆற்றை சுற்றி ஆலைகளே அதிகம் உள்ளது. பல வகை மீன்கள் செத்து மிதக்கிறது. மேலும் ரசாயன கலவைகளை உண்ணும் அந்த மீன்களை உண்டால் மனிதர்களுக்கு மேலும் மேலும் தொற்று நோய் ஏற்படுகிறது.

எனவே, அரசு மாற்று மின்வர்கத்தை நோக்கி திட்டங்கள் நகர வேண்டும். இந்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் வரும் 31-ம் தேதி இதே இடத்தில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். ஆதலால் அரசு உடனே தலையிட வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்