கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.

Update: 2023-06-08 19:04 GMT

 கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 1,280 இடங்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

கடைசி நாளான நேற்று விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 320 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்களை பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. நேற்றுடன் முதற் கட்ட கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 14-ந்தேதி மற்றும் 16-ந்தேதிகளில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்