வைகை அணை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

வைகை அணை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-09-27 13:35 GMT

வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பால பூமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்