செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-04 08:31 GMT

சென்னை,

* உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

* அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சேலத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

* நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

* கரீபியன் நாடுகளை தாக்கிய பெரில் புயலால் ஜமைக்காவில் 9 பேர் பலியாகினர்.

* டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசு பேருந்து நடத்துநர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் துருக்கி அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

* தேர்தல் சவாலில் தோல்வியடைந்ததால் பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் மந்திரி

* பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்