ஒட்டன்சத்திரம் அருகே என்ஜினீயர் தற்கொலை:

ஒட்டன்சத்திரம் அருேக நாைள திருமணம் நடக்க இருந்த நிலையில் என்ஜீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-31 17:29 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலைகோட்டையை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 28). என்ஜினீயர். இவர், சொந்தமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கும், கன்னிவாடி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நாளை (வியாழக்கிழமை) கன்னிவாடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை அவரே முன்நின்று ஆர்வமுடன் மேற்கொண்டு வந்தார். உறவினர்களுக்கு பத்திரிகை கொடுப்பது, திருமணத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவது என அனைத்து வேலைகளையும் அவர் ஈடுபட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு அர்ஜூனன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் அர்ஜூனன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மணக்கோலத்தில் இருக்க வேண்டிய அவரை, பிணக்கோலத்தில் பார்த்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்