வாய்க்கால் கரையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

வாய்க்கால் கரையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-14 19:52 GMT

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை நகரம் முத்துப்பேட்டை சாலையின் குறுக்கே கல்லணை கால்வாயின் கிளை நாடியம்பாள்புரம் வாய்க்கால் செல்கிறது. முத்துப்பேட்டை சாலையின் வடபுறம் மதுக்கூர் சாலை செல்லும் வழியில் ராஜாமடம் வாய்க்காலில் இருந்து பிரியும் நாடியம்பாள்புரம் வாய்க்கால் கரையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக தினமும் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால் கரையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்