மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு; 2 பேர் கைது

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-20 19:35 GMT

பேட்டை:

நெல்லை அருகே பேட்டை கக்கன்ஜிநகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி இசக்கி அம்மாள் (வயது 28). முத்துசாமி சீதற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதேபோல் டவுனை சேர்ந்தவர் பேச்சிவேல். இவர் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

‌இந்நிலையில் இசக்கி அம்மாளுக்கு நேற்று முன்தினம் பேட்டை தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது‌. குழந்தையை பார்ப்பதற்காக நேற்று அதிகாலையில் 4 மணிக்கு பேச்சிவேல் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போது முத்துசாமி அங்கு வரவே பேச்சிவேல் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது முத்துசாமி மற்றும் இசக்கி அம்மாளின் தம்பி சுடலை மணி, அவரது நண்பர் அசன் ஆகியோர் சேர்ந்து பேச்சிவேல் மோட்டர் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பேச்சிவேல் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணி மற்றும் அசனை கைது செய்தனர். முத்துசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்