கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-07-17 18:45 GMT

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 38), கொத்தனார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கடன் பிரச்சனை இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்ற யாரும் இல்லாத நேரத்தில் குமரேசன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராஜாக்கமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்