அரசு மருத்துவக்கல்லூரியில் குழுவினர் ஆய்வு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முதுநிலை படிப்பை தொடங்க அனுமதி அளிப்பது குறித்து தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

Update: 2022-06-29 16:19 GMT

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முதுநிலை படிப்பை தொடங்க அனுமதி அளிப்பது குறித்து தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

மருத்துவ குழுவினர் ஆய்வு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். இங்கு எம்.எஸ்., எம்.டி. ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முதுநிலை மருத்துவ பாடப்பிரிவை தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து முதுநிலை மருத்துவ பாடப்பிரிவை தொடங்க அனுமதி அளிப்பது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த பேராசிரியர் அஷிமா சர்மா தலைமையிலான குழுவினர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவ சேவை அதிகரிக்கும்

இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் அமுதவல்லி, கண்காணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முது நிலை பட்ட மேற்படிப்புக்கான அனுமதி இந்த கல்வி ஆண்டில் அளிக்கப்பட்டால் அதற்குரிய மாணவர் சேர்க்கை தொடங்கும்.

இதன் மூலம் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடர்பான மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்