தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-05-23 16:22 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து கணிசமாக அதிகரித்தது. மொத்தம் 3,452 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.671, குறைந்தபட்சமாக ரூ.363, சராசரியாக ரூ.525.61 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.18 லட்சத்து 14 ஆயிரத்து 528 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்