மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது

வடக்கன்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-24 20:21 GMT

வடக்கன்குளம்:

பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார், பழவூர் அருகே விசுவநாதபுரம் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பழவூர் அருகே கன்னங்குளம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் அஜித்தை (வயது 24) வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

இதில் அவர் 50 கிராம் கஞ்சாவை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அஜித்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்