186 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

186 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Update: 2022-09-18 18:45 GMT

கொள்ளிடம் அருகே உள்ள ஆயங்குடிபள்ளம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத்தலைவர் பானுசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 186 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார். இதில் ஆத்மா திட்ட தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமாலுதீன், துணைத்தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜா மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். இதேபோல் ஆச்சாள்புரம் மேல்நிலைப்பள்ளியில் 124 மாணவர்களுக்கும், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 166 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்