ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-18 20:34 GMT


விருதுநகர் மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அனைத்து ஓய்வு சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்புராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு அரசு அலுவலக சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி நிறைவுரையாற்றினார். 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்