தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

Update: 2023-09-16 02:23 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை வந்தால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்த நிலையில், சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன.

வடபழனி, தாம்பரம் வழியாகவும், மதுரவாயல், வானகரம் சுங்கச்சாவடி வழியாகவும் பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன. ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்