சமுதாய அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2023-05-30 18:45 GMT

விழுப்புரம்

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசு அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து வெளியிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மேற்கண்ட சமுதாய அமைப்புகள், விருதுக்காக தேர்வு செய்யும் செய்முறைகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே 2022-2023-ம் ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கைகள், நிதி பயன்பாடு, சேமிப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள், பயிற்சிகள், சமுதாயம் சார்ந்த பணிகளில் பங்குபெறுதல் ஆகிய நடவடிக்கைகள் தொகுத்து மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாண்மை அலகில் வட்டார இயக்க மேலாளரிடம் மற்றும் நகர்ப்புற சமுதாய அமைப்புகள், சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களை தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வருகிற ஜூன் 25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்