சாராயம் விற்ற 13 பேர் கைது

வாணியம்பாடியில் சாராயம் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-18 18:06 GMT

வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற ஜெயசீலன் (வயது 42), பிரபுதேவா (30), நியூடவுன் பகுதியில் சாராயம் விற்ற சரவணன் (29), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மது பானங்களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி.பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த அனுமுத்துராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஆலங்காயம் பகுதியில் சாராயம் விற்ற பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்