மக்களவையில் மறுபடியும் வீராங்கனைகள் குழு - புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Update: 2024-06-24 21:28 GMT

புதுடெல்லி,

18-வது நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகளும், எம்.பி.க்களும் பதவி ஏற்றனர். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சக பெண் எம்.பி.க்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'மக்களவையில் மறுபடியும் வீராங்கனைகள் குழு' என்று குறிப்பிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), டிம்பிள் யாதவ் (சமாஜ்வாடி) ஆகியோர் அமர்ந்திருந்தனர். இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்