"அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா" - கேரள அரசு உத்தரவு

பள்ளி சுற்றுலாக்களுக்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-10-07 17:15 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் பள்ளிகளில் இருந்து சுற்றுலா செல்ல அம்மாநில பள்ளிக்கல்வித்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேரள மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்