டெல்லி: 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளான 16 வயது சிறுவன்..!

இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-11 19:50 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் 16 வயது சிறுவனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஐந்து ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விக்ரம் (26) என அடையாளம் காணப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐந்து பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருவதாக காவல்துறை துணை ஆணையர் (வடக்கு) சாகர் சிங் கல்சி தெரிவித்தார்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்