மேகாலயாவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஷில்லாங்,
மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.