சரத்பவார் எங்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது சிலரின் தூக்கத்தை கெடுக்கும்: ஏக்நாத் ஷிண்டே பேச்சு

சரத்பவார் எங்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது சிலரின் தூக்கத்தை கெடுக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

Update: 2022-10-20 11:29 GMT

மும்பை

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று நடந்த இரவு விருந்து நிகழச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டார். மேலும் அவர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஆகியோருடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.

இந்தநிலையில் சரத்பவாா் எங்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது சிலரின் தூக்கத்தை கெடுத்து இருக்கும் என விழாவில் ஏக்நாத் ஷிண்டே பேசினார். ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கும் வகையில் இந்த கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:- சரத்பவார், தேவேந்திர பட்னாவிஸ், ஆஷிஸ் செலார் ஆகியோர் ஒரே ேமடையில் உள்ளனர். இது சிலரின் தூக்கத்தை கெடுக்கும். ஆனால் இது அரசியல் செய்வதற்கான இடமல்ல. நாம் எல்லோரும் கிரிக்கெட்டின் ரசிகர், ஆதரவாளராக உள்ளோம். எனவே அரசியல் வேறுபாடுகளை கழைந்து கிரிக்கெட் வளர்ச்சிக்காக இங்கு வந்து உள்ளோம். வான்கடே மைதானம் குத்தகையை புதுப்பித்தல், மைதானத்துக்கு பாதுகாப்பு வழங்கி போலீசாருக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்குதல் போன்ற பிரச்சினை மாநில அரசு தீர்க்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்