இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருடன் நேபாள வெளியுறவு செயலாளர் இன்று சந்திப்பு

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள வெளியுறவு செயலாளர் இன்று மத்திய வெளிவிவகார மந்திரியை சந்திக்க உள்ளார்.

Update: 2022-09-14 01:44 GMT


புதுடெல்லி,



நேபாள நாட்டின் வெளியுறவு செயலாளர் பரத்ராஜ் பாடியால், இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அழைப்பு விடுத்ததன் பேரில் பரத் இந்தியா வந்துள்ளார்.

இதன்படி இந்தியாவுக்கு வருகை தந்த அவர் வினய் குவாத்ராவை நேற்று சந்தித்து பேசினார். இதில் இருதரப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன என மத்திய வெளிவிவகார துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்ரை, பரத் சந்தித்து பேச உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்