ஜார்கண்டில் மாவோயிஸ்டு தாக்குதல்: துப்பாக்கிச் சண்டையில் 2 போலீசார் பலி

சண்டையில் குண்டு காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினர்.

Update: 2023-08-15 23:02 GMT

கோப்புப்படம் 

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் கொல்கான் வனப்பகுதியில் முக்கிய மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதன் கமாண்டோ பிரிவு, ஜார்கண்ட் போலீசின் ஜாகுவார் படை, மாவட்ட ஆயுத போலீஸ் படை அடங்கிய கூட்டு படையினர் மேற்கு சிங்பும் மாவட்ட வனப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்த சண்டையில் குண்டு காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்