மணிப்பூருக்கு செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் மம்தா பானர்ஜி...!

மம்தா பானர்ஜி மணிப்பூருக்கு செல்ல அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-30 11:38 GMT

கொல்கத்தா,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.

இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது.

இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், மணிப்பூருக்கு செல்ல அனுமதி வழங்கும்படி மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க மணிப்பூருக்கு செல்ல அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்