நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-02 05:51 GMT

புதுடெல்லி,

2023-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் ஜனாதிபதி உரையுடன் கூடியது. 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்