கேரளா: மகனை காப்பாற்ற முயன்ற தந்தை அடித்துக் கொலை - குடிபோதையில் இருந்த வாலிபர்கள் வெறிச்செயல்...!

கேரளாவில் மகனை காப்பாற்ற முயன்ற தந்தையை குடிபோதையில் இருந்த வாலிபர்கள் அடித்துக் கொலை செய்தனர்.

Update: 2022-08-21 08:02 GMT

பாலக்காடு,

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் விமல் (54). இவரது மகன் ரோகித் (22). சம்பவத்தை இரவு 7 மணி அளவில் ரோகித் தனது வீட்டின் அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் ரோகித் வீட்டின் அருகே தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனால் அங்கு நின்ற ரோகித் இவர்களை காப்பாற்றுவதற்காக சென்றார்.

குடிபோதையில் இருந்த அவர்கள் ரோகித்தை தாக்க முயன்றனர். இதை அறிந்த தந்தை விமல் ஓடிவந்து மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது போதையில் இருந்த 2 வாலிபர்களும் தந்தை விமலை பயங்கரமாக தாக்கி உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விமலை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் விமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்