காஷ்மீர்: 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் நிறைவு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் நிறைவடைந்தது. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2023-09-20 02:37 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஹடொல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கடந்த வாரம் புதன்கிழமை பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங், ராணுவ மேஜர் ஆஷிஷ், போலீஸ் டிஎஸ்பி ஹிமயன் பட், ராணுவ வீரர் உள்பட 4 பேர் வீரமரணமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்துள்ளது. தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாதியின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பயங்கரவாதி உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்