இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2023-03-26 09:16 GMT

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கி உள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை 9,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்