கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடு வந்தேன்; அப்படியே... 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி

டெல்லியில் பூட்டி இருந்த அரசு மாநகராட்சி பள்ளியை உடைத்து, கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடே வந்தேன் என 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2023-04-06 11:24 GMT

புதுடெல்லி,

டெல்லியில் அரசு மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில், ஒப்பந்த தொழிலாளர்களாக கணவன், மனைவி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 18 வயது மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களாக அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர் தனது குடும்பத்துடன் பள்ளியிலேயே தங்கி உள்ளார். கணவன், மனைவி இருவரும் தங்களுக்கான கூலியை பெறுவதற்காக நேற்று முன்தினம் பள்ளியை விட்டு சென்று உள்ளனர்.

இதனால், இரு சகோதரிகளும் தனியாக இருந்து உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் நபர் ஒருவர், பூட்டி இருந்த அரசு பள்ளியை உடைத்து கொண்டு, உள்ளே புகுந்து உள்ளார்.

இதன்பின்னர், பள்ளியில் பொருட்களை கொள்ளையடித்து விட்டு, கத்தி ஒன்றை எடுத்து கொண்டு சென்றுள்ளார். போகும்போது, பள்ளியில் இருந்த 16 வயது சிறுமியையும் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் என எப்.ஐ.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளியை நாங்கள் தேடி வருகிறோம். நாங்கள் பல்வேறு சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளனர். ஒவ்வொரு கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 27 வயது வாலிபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். அந்த நபர் போதை பொருளுக்கு அடிமையான ஆசாமி என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்தோம். அவரிடம் நடந்த விசாரணையில், மூடியிருந்த பள்ளி கூடத்திற்குள், கொள்ளை அடிக்கும் நோக்கத்துடனேயே புகுந்தேன். அதன்பின்னரே சிறுமியை பலாத்காரம் செய்தேன் என கூறியுள்ளார் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுபோன்ற வழக்கில், தைரியமுடன் விளக்கம் அளித்து, போதை ஆசாமி என்ற பெயரில் தப்பி செல்ல கூடிய அளவுக்கு நமது சட்டதிட்டங்கள் இருப்பதனால், இதனை கேட்டு கொண்டிருக்க கூடிய அவல நிலையில், குடிமக்களை காவல் காக்கும் பணியில் உள்ள காவலர்களின் சூழலும் காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்