உத்தரபிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்

ரிக்டர் அளவில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Update: 2024-06-02 13:07 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.49 மணியளவில் நிலநிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

77 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்