நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் திரவுபதி முர்மு

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வரும் 25-ம் தேதி பதவி ஏற்கிறார் திரவுபதி முர்மு.

Update: 2022-07-22 11:03 GMT

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி.நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே.

இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்.

பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார். மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும்.

இந்நிலையில், திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்