இந்தியாவில் 22 பேருக்கு கொரோனா
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது.
இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 961 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று காலை நிலவரப்படி, 1,452 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தனர். அதேபோல் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 922 ஆக இருந்தது.