சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் விஷ்ணு தியோ சாய்...!

ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Update: 2023-12-13 10:54 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 54 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

தேர்தலில் வேற்றி பெற்றதையடுத்து முதல்-மந்திரியை தேர்வு செய்யும் நடவடிக்கையை பாஜக தொடங்கியது. அதன்படி, ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக தலைமை அறிவித்தது.

பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துப்படி விஷ்ணு தியோ முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஷ்ணு தியோ சாய் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

சத்தீஷ்கார் மாநில கவர்னர் அரிசந்தன், முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய்க்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்