கோடை வெயில் பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-04-18 11:36 GMT

புதுடெல்லி,

வெயில் அதிகரிப்பதால் பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா எழுதியுள்ள கடிதத்தில் ,

பணியிடங்களில் போதிய குடிநீர் , காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.என கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்