இந்தியாவில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

13 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2023-07-30 22:33 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா 50 ஆக பதிவானாது. நேற்று அது 52 ஆக அதிகரித்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 588 ஆக அதிகரித்தது. நேற்று கொரோனாவில் இருந்து 43 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 62 ஆயிரத்து 208 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 13 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 1,464 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்தனர். தொடர்ந்து 13-வது நாளாக கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 916 ஆக உயர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்